வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 13 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டமான கைபர் பக்துன்க்வாவில், ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை இராணுவத் கான்வாய் மீது மோதியதில் 13 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 10 ராணுவ வீரர்களும், 19 பொதுமக்களும் காயமடைந்தனர் என்று உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“ஒரு தற்கொலை படை தீவிரவாதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை இராணுவ வாகனத் தொடரணியின் மீது மோதியுள்ளார். இந்த குண்டுவெடிப்பில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர், 10 ராணுவ வீரர்கள் மற்றும் 19 பொதுமக்கள் காயமடைந்தனர்,” என்று அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்,
காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ இந்த குண்டு வெடிப்பு அருகிலுள்ள வீடுகளையும் சேதப்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன, 6 குழந்தைகள் காயமடைந்தனர், ”என்று தெரிவித்தார்.
இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இப்பகுதியில் அடிக்கடி தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனால் அங்கு எப்போது பதற்றமான சூழல் நிலவுகிறது..
பாகிஸ்தான் முழுவதும், குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்திய தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், தெற்கு வஜீரிஸ்தானில் உள்ள ஜன்டோலா சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள எல்லைப் படை முகாமை தற்கொலை குண்டுதாரி குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது.
பலூச் விடுதலை இராணுவத்தின் (BLA) போராளிகள், மார்ச் மாதத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலைத் தாக்கி, 21 பயணிகள் மற்றும் நான்கு துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2025 இன் படி, பயங்கரவாதம் தொடர்பான இறப்புகளில் பாகிஸ்தான் 45% உயர்வைப் பதிவு செய்துள்ளது. இது 2023 இல் 748 இல் இருந்து 2024 இல் 1,081 ஆக உயர்ந்துள்ளது. பயங்கரவாத இறப்புகளின் அடிப்படையில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
Read More : “அவமரியாதையாக பேசுவதை ட்ரம்ப் நிறுத்தணும்.. அப்பாவிடம் ஓடிய இஸ்ரேல்..” பங்கம் செய்த ஈரான்..