போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு!. தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 இலங்கையர்கள் கைது!. கடலோர காவல்படை அதிரடி!.

arrests 3 Sri Lankans 11zon

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இலங்கையைச் சேர்ந்த குற்றப் பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவ இருப்பதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரையிலான பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தனுஷ்கோடி அடுத்த 4-ம் மணல்திட்டு பகுதியில் சிலர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிற்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த கடலோரக் காவல் படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து, மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கபிலன் (34), நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த சுமித்ரோலன் பெர்னாண்டோ (43), மாதவிலக்கைச் சேர்ந்த சாகர குணதிலக (33) என்பதும், சட்டவிரோதமான முறையில் இலங்கை மன்னார் மாவட்டம் பேச்சாளையிலிருந்து படகு மூலம் தலா ரூ.2 லட்சம் செலுத்தி தனுஷ்கோடி வந்ததும் தெரியவந்தது. மேலும், தமிழகத்தில் ஊடுருவி, பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும், இலங்கை தமிழர் கபிலன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்ததும், மற்ற இருவரும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.

Readmore: சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருப்பவர்கள்; விசா மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!. அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!

KOKILA

Next Post

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. 3 பேர் பலி..!! பலர் காயம்..

Sun Jun 29 , 2025
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் […]
ratha yathra 1

You May Like