தமிழ்நாடு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவரது மகன் இன்பநிதி. இந்நிலையில், இன்பநிதி பாசறை என்ற வாசகத்துடன் செப்டம்பர் 24ஆம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று புதுக்கோட்டை நகரப் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.-வாக இருந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இது பலரிடம் வரவேற்பு பெற்றாலும், எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் அடுத்த கட்டமாக உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியும் அரசியலுக்கு வருவார், அவரையும் திமுகவினர் ஆதரிப்பாளர்களா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த விமர்சனத்திற்கு பல மூத்த அமைச்சர்களும் கூட இன்பநதி அரசியலுக்கு வந்தாலும் அவரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி புகைப்படத்துடன் இன்பநிதி பாசறை என்ற வாசகத்துடன் செப்டம்பர் 24ஆம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் இன்பநிதியை எதிர்காலமே என்று குறிப்பிட்டும் மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை போராட்ட களம் இன்றி வெற்றிகள் கிடைப்பதில்லை என்ற வாசகத்துடன் புதுக்கோட்டை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.