சென்னை: ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

death

சென்னை எழும்பூர் காவல் ஆனையர் அலுவலகம் அருகே சரக்கு வாகனம் மோதி ஸ்கூட்டரில் வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்பவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


பெண்ணை மோதிய சரக்கு வாகனம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் வந்த சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பள்ளி சென்ற சிறுமி சவுமியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பீக் அவர்ஸ் நேரங்களில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நகரப்பகுதிக்குள் வருவதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வந்தனர். மீறி வரும் வாகனங்களை கைப்பற்றி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சரக்கு வாகனம் மோதி இளம் பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA கைது.. ரூ. 76 லட்சத்தை திருடியது அம்பலம்..

Next Post

#Breaking : IAF-ன் ஜாகுவார் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.. விமானி உட்பட இருவர் பலி..?

Wed Jul 9 , 2025
ராஜஸ்தானில் இன்று இந்திய விமானப்படையின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே இன்று இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ரத்தன்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் சமநிலையற்றதாகத் […]
fighter jet 2025 07 7d4c67bf8e18121b60266d9b3a6da7c4 16x9 1

You May Like