51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி.. இளைஞர்களை மேம்படுத்தும் ரோஸ்கர் மேளா..

deccanherald 2023 10 c39afe80 8a02 44be 92fc 347f85c1f989 modi pti 1 1131328 1659115451 2

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பதவியேற்ற 51,000க்கும் மேற்பட்டோருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இளைஞர் சக்திக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஊக்கிகளாக மாற்றுவதற்கும் நமது அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை ரோஸ்கர் மேளா பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உங்கள் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்தியாவுக்கு இரண்டு சக்திகள் உள்ளன என்று உலகம் இப்போது நம்புகிறது – மக்கள்தொகை மற்றும் ஜனநாயகம்… நான் சமீபத்தில் 5 நாடுகள் சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளேன். மற்ற நாடுகளுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்கு பயனளிக்கும்.”

வேலைவாய்ப்பு உருவாக்கம்

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் ரோஸ்கர் மேளாவும் ஒரு பகுதியாகும். இந்த முயற்சி இளைஞர்களை மேம்படுத்துவதற்கும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் நோக்கமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. ரோஸ்கர் மேளா பிரச்சாரம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

16வது ரோஜ்கர் மேளா நாடு தழுவிய அளவில் 47 இடங்களில் நடைபெறும். ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : PM கிசான் யோஜனா: ரூ.2000 பெற.. இன்றே இந்த 7 விஷயங்களை செய்யுங்க..

RUPA

Next Post

தலைவலின்னு ஈஸியா எடுத்துக்காதீங்க.. இது ஆபத்தான நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. எச்சரிக்கும் நிபுணர்..

Sat Jul 12 , 2025
தலைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் அடையாளம் காணப்படுவதில்லை. அல்லது பெரும்பாலும் அதனை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. ஆனால் தலைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சரியான நேரத்தில் ஒரு நரம்பியல் நிபுணரை அணுகுவது முக்கியம். இதன் மூலம் சரியான சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்கும். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் […]
mn when to see a neurologist for a headache

You May Like