மசோதாக்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்.. மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு..!! – உச்சநீதிமன்றம்

supreme court 1

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் ஜனாதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.


சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் ஜனாதிபதி முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அதிரடி தீர்ப்பினை அளித்தது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மசோதக்களை கிடப்பில் போட்டது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதாவது, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், ஜனாதிபதிக்கு 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு இருந்தார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் 14 கேள்விகள் கேட்டு கூடுதல் விளக்கத்தை கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்றத்துக்கு கேள்வி எழுப்பி ஜனாதிபதி கடிதம் எழுதிய நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்க 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், நீதிபதிகள் விக்ரம்நாத், நரசிம்ஹா, அதுல் சந்தூர்கர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் அனைத்து மாநில அரசுகளுக்கும் பதிலளிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Read more: உங்க வீட்ல குழந்தைகள் இருக்காங்களா..? இதை செய்யாவிட்டால் ஆதார் கார்டு செல்லாது..!! – UIDAI எச்சரிக்கை

English Summary

Deadline to take a decision on the bills.. 14 questions raised by the President.. Supreme Court notice to all state governments..!!

Next Post

இந்த விலங்குகளிடம் சிக்கினால் சிங்கத்திற்கு தான் ஆபத்து.. காட்டின் ராஜாவை ஈஸியா கொல்லும் விலங்குகள்..

Tue Jul 22 , 2025
காட்டில் சிங்கத்தை கொல்லக்கூடிய 6 சக்திவாய்ந்த விலங்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.. காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் விலங்கு எது என்றால் சிங்கம் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும்.. வலிமையானவை, அச்சமற்றவை என்று கருதப்படும் சிங்கங்கள் உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ளன. சிங்கத்தின் சக்தி மற்றும் கூர்மையான உள்ளுணர்வு காரணமாக சிங்கங்கள் காட்டின் ராஜாக்கள் என்று அழைக்கப்படுகின்றன.. சிங்கம் அனைத்து விலங்குகளையும் தோற்கடித்துவிடும் என்று நீங்கள் நினைத்தால் […]
6qsn6gms lion 625x300 29 April 25 1

You May Like