உலக அரங்கில் தமிழுக்கு அங்கீகாரம்: மோடி அரசின் முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

modigangai down 1753874299 1

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் உலகளவில் புதிய அங்கீகாரத்தை உருவாக்கி வருவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மரபு, பண்பாடு, அறம் ஆகியவற்றில் தமிழின் பங்கு மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தி, தமிழை தேசத்தின் அடையாளமாக முன்னிறுத்தும் பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறையை தமிழறிஞர்கள், மொழிபுலவர்கள் மற்றும் பல தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.


உலகளாவிய தமிழ் பெருமை: ஐக்கிய நாடுகள் சபை (UN), ஜி20 உச்சி மாநாடுகள், மற்றும் பல சர்வதேச மேடைகளில் தமிழ் கவிஞர்களின் மேற்கோள்கள் மற்றும் தமிழ் மரபுகளை பிரதமர் மோடி தனது உரைகளில் மேற்கோள் காட்டி வருகிறார். “தமிழ் உலகின் பழமையான மொழி” என்பதை அடிக்கடி வலியுறுத்தும் அவர், பன்னாட்டளவில் தமிழுக்கு ஏற்படும் மரியாதையை மேலே தூக்கி நிறுத்தியுள்ளார்.

காசி-தமிழ் சங்கமம், செளராஷ்டிரா தமிழ் சங்கமம்: “காசி – தமிழ் சங்கமம்” மற்றும் “சௌராஷ்டிரா – தமிழ் சங்கமம்” போன்ற நிகழ்வுகள், வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பண்பாட்டு, பாரம்பரிய இணைப்புகளை வலுப்படுத்தும் விதமாக மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்று தமிழ் பாரம்பரியத்தின் பெருமையை வெளிக்கொணர்ந்தனர்.

தமிழில் உயர் கல்விக்கு வலியுறுத்தல்: மருத்துவக் கல்வி உள்ளிட்ட உயர் கல்வியைத் தமிழில் வழங்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பு, மாணவர்களிடையே அடிப்படைப் புரிதலை வலுப்படுத்தும் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளது. இதனோடு, பல மத்திய அரசுத் தேர்வுகளில் தமிழிலும் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டதன் மூலம், தமிழ் பேசும் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்துள்ளது.

தமிழ் கலாச்சாரத்திற்கு மரியாதை: தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இலக்கிய மரபுகளுக்கு தேசிய மட்டத்தில் உரிய மரியாதை வழங்கும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

செங்கோல்: புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில், தமிழர்களின் அரசியல் பாரம்பரிய சின்னமான “செங்கோல்” தேசிய மரியாதையுடன் நிறுவப்பட்டு, சைவ ஆதீனங்களின் பங்கு பெருமையுடன் வலியுறுத்தப்பட்டது. இது, பாரம்பரிய இந்தியாவின் அரசியல் பண்பாட்டு அடையாளங்களில் தமிழர்களின் பங்களிப்பை வெளிக்கொணர்கிறது.

நடராஜர் சிலை: ஜி20 உச்சி மாநாட்டின் வரவேற்பு இடத்தில், பிரமாண்டமான நடராஜர் சிலை நிறுவப்பட்டு, தமிழர்களின் ஆன்மிகக் கலைபண்பையும், நடன மரபையும் உலக மேடையில் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தியது. இது, தமிழ் தெய்வீக கலைக்குரிய அங்கீகாரம் எனப் பார்க்கப்படுகிறது.

அகத்தியர் திருவள்ளுவர்: அகத்தியர், திருவள்ளுவர் போன்ற புனித புலவர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில், மத்திய அரசு புதிய ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இது, தமிழ் இலக்கியத்தை புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஓர் அரிய முயற்சியாக அமைந்துள்ளது.

சோழர்களின் பெருமை: ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு இதுவரை அரசியல் மட்டத்தில் வழங்கப்படாத அங்கீகாரத்தை, பிரதமர் மோடி அவரது செயல்பாடுகள் மூலம் வழங்கி வருகிறார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடித் திருவாதிரை விழாவில் நேரில் பங்கேற்ற அவர், ராஜேந்திர சோழனுக்கான நினைவு நாணயத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ராஜராஜ சோழர் மற்றும் அவரது மகனுக்கு சிலைகள் அமைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புவிசார் அரசியலைக் கடந்து, மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தப் திட்டங்கள் செயல்படுகின்றன.

அடிப்படை கட்டமைப்பு:

  • சேத்தியாத்தோப்பு – சோழபுரம் நான்கு வழி நெடுஞ்சாலை மாநிலத்தின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் முக்கிய திட்டம்.
  • தூத்துக்குடி விமான நிலையம்: ₹450 கோடி செலவில் புதிய முனையக் கட்டிடம் அமைக்கப்படுவதுடன், வெளிநாட்டு விமான சேவைக்கு மேம்பாடு.
  • பம்பன் ரயில் கடல் பாலம்: இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில் பாலம் எனும் நவீன தொழில்நுட்பத்துடன், மதுரை–ராமேஸ்வரம் பயண வழிக்கு புதிய அத்தியாயம்.

ரயில்வே துறையில் துரித வளர்ச்சி:

  • மத்திய அரசின் ‘அம்ருத் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுகின்றன.
  • பல்வேறு ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அவை பயணிகள் வசதிக்கு புதிய உயரத்தை வழங்குகின்றன.
  • தூத்துக்குடி துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டு, ரூ.4,800 கோடிக்கு மேல் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான வீடுகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் நிறுவப்பட்டு, மின் சுயநிறைவு நோக்கில் மக்கள் நகர்த்தப்படுகின்றனர். இது, சுத்த மற்றும் பசுமை சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கக்கூடிய முக்கிய முயற்சியாகவும், மின் செலவுகளை குறைக்கும் வழியாகவும் அமைகிறது.

திமுக விமர்சனம்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உலகளாவிய அளவில் பெருமை சேர்த்துள்ளதாக பலர் பாராட்டுகின்ற நிலையில், தமிழ்நாட்டின் திமுக அரசு மீது மத்திய திட்டங்களுக்கு எதிர்ப்பு, வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது, மற்றும் வாரிசு அரசியல், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டிருக்கின்றன.

தேசிய கல்விக் கொள்கை (NEP), மும்மொழிக் கொள்கை போன்ற முக்கியமான மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க. அரசு எதிர்ப்பதால், தமிழ்நாட்டுப் பெண்கள் உள்ளிட்ட பலர் பயன்பெறும் திட்டங்கள் தடைபடுகின்றன. வாரிசு அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற விமர்சனங்கள் தமிழக அரசு மீது முன்வைக்கப்படுகின்றன.

திருவள்ளுவர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கியப் பெருமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, தி.மு.க. குடும்ப அரசியல் மற்றும் வம்சாவளிப் பெருமைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முயற்சி எடுக்காத திமுக, கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க கடலுக்குள் இடம் தேடுவது சரியா என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் வந்தபடி உள்ளன.

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டின் தேவைகளுக்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த தி.மு.க. தவறிவிட்டது. பள்ளிக் கல்வித் தரக் குறைவு, மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவதற்கான அடிப்படை ஒருங்கிணைப்புக் குறைவு போன்ற பிரச்சினைகள் உள்ளன என்ற விமர்சனங்களையும் திமுக அரசு எதிர்கொள்கிறது.

உண்மையான தமிழ் பெருமை யாருக்கு? “தமிழும் தமிழனும் தேசத்தின் அடையாளம்” என்பதை உலகிற்கு உணர்த்தியது மோடி அரசு என்பதை, பாரம்பரிய அங்கீகாரம், மொழி வளர்ச்சி, மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் நிரூபித்துள்ளது.

இதற்கு மாறாக, தி.மு.க. அரசு தமிழ் வரலாறு சார்ந்த வீரர்களையும், பாரம்பரியச் சின்னங்களையும் ஒதுக்கி, மக்கள் மத்தியில் அவர்களது சாதனைகளை மறக்கடிக்க முயற்சி செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எல்லா ஜாதியினரும் சோழர்கள் எங்கள் ஜாதிக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜாதி பாகுபாடு இல்லாமல் திருமண உறவு வைத்தவர்கள் சோழர்கள். ஆனால் ஏன் அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை ஏன் தரவில்லை திமுக அரசு என்ற கேள்விகளை, மோடி அரசின் தமிழ் முன்னோடிகளை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் எழுப்ப வழி செய்து கொடுத்துள்ளது.

Read more: குறைவாக தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா..? ஆய்வில் வெளியான ஷாக் தகவல்..!

English Summary

Recognition of Tamil on the world stage: Accumulating praise for the Modi government’s efforts..!

Next Post

மாதம் ரூ.20,500 வருமானம் தரும் சேமிப்பு திட்டம்.. வயதான காலத்தில் யாரையும் நம்பியிருக்க வேண்டாம்..!!

Thu Aug 7 , 2025
An amazing plan that will give you an income of Rs. 20,500 per month.. You don't have to depend on anyone in your old age..!!
8th Pay Commission Pension Increase 780x470.jpg 1

You May Like