“ இது தான் மாநிலக் கல்விக் கொள்கையா? சமூக நீதி என்பது பேச்சு தான், செயலில் இல்ல..” அண்ணாமலை சாடல்..

annamalai stalin

திமுக அரசாங்கத்தில் சமூக நீதி’ என்பது பேச்சில் மட்டுமே உள்ளது, செயலில் அல்ல என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து வரும் திமுக அரசையும், திமுக அரசின் கொள்கைகளையும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. அந்த வகையில் திமுக அரசின் சமூக நீதி கொள்கையை அண்ணாமலை சாடி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட மாநில கல்விக் கொள்கையின் ஒரு பகுதியா இது?


நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி, நரிக்குறவர் சமூகத்தை ST பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார், மேலும் திமுக அரசு அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை இல்லாததால் அரசுப் பள்ளியில் இருந்து வெளியேற்றுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உட்பட ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் கதவுகளையும் அவரது பெற்றோர் தட்டியுள்ளனர், ஆனால் அவர்கள் அலட்சியமாகவே இருந்தனர். திமுக அரசாங்கத்தின் கீழ், ‘சமூக நீதி’ என்பது பேச்சில் மட்டுமே உள்ளது, செயலில் அல்ல.” என்று பதிவிட்டுள்ளார்..

Read More : “தவெக தான் முதன்மை சக்தி என்பதை மீண்டும் உணர்த்துவோம் .. மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்..” விஜய் பரபரப்பு அறிக்கை..

English Summary

Annamalai has criticized the DMK government for saying that ‘social justice’ exists only in words and not in action.

RUPA

Next Post

"10 வருடம் லைசன்ஸ் பத்தி நினைக்கவே கூடாது" TTF வாசனின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

Tue Aug 12 , 2025
No license for 10 years.. Chennai High Court dismisses TTF Vasan's petition..!!
TTF

You May Like