திமுகவின் உள்கட்சி நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள 77 மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக அமைப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 110 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்:புதிய அமைப்பில் பொதுவாக 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற […]

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு ரீதியாக தற்போது 78 மாவட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தேர்தலுக்கு முன்பாகவே அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அப்போது 6 மாவட்டங்கள் மட்டுமே புதிதாகப் பிரிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன. இதனிடையே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட தோல்வி குறித்து […]

தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசின் வருகைக்கு பிறகு, மாநில அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எதிர்காலத்தில் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலா வந்தன. இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி சோமு, “அரசியலில் […]

சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கறிஞர் திருஞானசம்பந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் விதிகள் படி, வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் அறக்கட்டளை தொடர்புகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், திமுக அறக்கட்டளை பற்றிய தகவல்களை வேட்புமனுவில் […]

முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக மாற்றியுள்ளது தற்போதய தவெக அரசு. அதுமட்டுமின்றி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலானஇந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு செப்.15-ம் தேதி அறிஞ்ஞர் அண்ணா […]

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 […]

திமுக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருடன் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.. இதை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அன்பகத்தில் பெரியார், […]

நீங்கள் அமைத்துக் கொடுத்துள்ள இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.. யார் எந்த நிலைமைக்கு போனாலும் இந்த கிண்டலும், கேலியுமாக பேசுவது இருக்க தானே செய்யும்.. நம்மை பற்றி, நமது அரசியல் பற்றி, நமது பேச்சு பற்றி கிண்டல், கேலியாக பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.. தயவு செய்து இதை நிறுத்திவிடாதீர்கள்.. தயவு செய்து தொடர்ந்து கிண்டல் செய்யுங்கள்.. நீங்கள் தான் எனது எனர்ஜி ஃபோர்ஸ்.. நீங்கள் பேசிக்கிட்டே […]

திருச்சியில் தவெக சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ உங்க விஜய்யின் ஆட்சி அமையக் கூடாது என்னென்ன கூத்து நடத்தினார்கள் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.. இப்போதும் நமது மக்களை தற்குறி என்று கூறுகிறார்கள்.. நீங்கள் தற்குறி என்று சொன்னவர்கள் தான் இன்று உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.. அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி மக்கள் நமக்கு ஓட்டுப்போட்டுள்ளார்களாம்.. மக்கள் […]

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் […]