கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது […]

ராஜஸ்தானில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ”நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறினார்கள். காங்., ஆட்சிக்கு வந்தால் நமது சொத்துகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும். நகர்ப்புற நக்சல் சிந்தனை, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலிகளைக்கூட விட்டுவைக்காது” எனப் பேசியிருந்தார். […]

பாஜக ஏன் வரவே கூடாது? என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு […]

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக்களத்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை பங்களித்ததாக பாஜக முன்வைக்கும் தரவுகளை மறுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடையுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்ட விளக்கம் இணையவெளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; இத்தனை ஆண்டுகளாக, பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் […]

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக கூறுவது அப்பட்டமான பொய்க்கணக்கு எனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பாஜக அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு! இதில் இரண்டு கூறுகள் உள்ளன : 1) மத்திய அரசு மாநில அரசுக்கு […]

பாஜக உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசியவர்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியாக இருக்கும் இந்தியா, அமளியாக மாறிவிடும். மாநிலத்திற்கும், நாட்டுக்கும் நம்பிக்கை தரும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்தும் மோடி, திமுகவை குற்றம் சாட்டலாமா?. இப்போது கூட சமூக நீதி நிறைந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, முஸ்லிம் […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 22-ம் தேதியன்று, திருச்சியில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். இதுவரை இந்தப் பயணத்தில், I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஏறத்தாழ 1,930 கிலோ மீட்டர் பயணம் செய்து முதல்வர் ஏறத்தாழ 2 கோடி மக்களைச் சந்தித்துள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுக்கு இரண்டு எஜமானர்கள் உண்டு. ஒன்று எங்கள் மனச்சாட்சி, மற்றொன்று நாங்கள் மதிக்கும் மக்கள் என்றார் அண்ணா. இந்திய அரசியல் […]

கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  “1974 ல் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க […]

பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் அதிகமாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்; போதைப்பொருள் அதிகளவில் பிடிபடும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆள்பவை. தமிழ்நாடு அந்த பட்டியலில் இல்லை. அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறி தமிழ்நாட்டு மக்களையும் இளைஞர்களைப் பற்றியும் அவதூறு செய்வது ஏன்..? மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி […]

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு. சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு. 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு. சிங்காரச் சென்னை திட்டத்திற்கு […]