fbpx

சிலிண்டர் இருந்தாலே ரூ. 50 லட்சம் வரை இலவச காப்பீடு!… இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விறகு அடுப்பில் வெந்த காலம் மாறி இப்போது அனைவரது வீட்டிலுமே சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்தும் சலுகைகள் வழங்கப்படுக்கிறது. இலவச சிலிண்டர் திட்டம், சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட நிறைய சலுகைகள் உள்ளன. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு மூலை முடுக்கெங்கும் பரவி வருகிறது.

சமையல் சிலிண்டருக்கு காப்பீடு வசதியும் உள்ளது. அது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. ஏனெனில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடிக்கக் கூடிய அபாயமும் உள்ளது. அவை இயல்பாகவே பாதுகாப்பானவை என்றாலும், வாடிக்கையாளர்களின் கவனக் குறைவால் ஏதேனும் அசம்பாதிவிதங்கள் ஏற்படலாம். இதற்கு காப்பீட்டு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. சிலிண்டர் இணைப்பை வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலிருந்து இந்த காப்பீடு கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை காப்பீடு உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உதவியை வழங்குவதற்காக முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் பெட்ரோலியம் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. வாடிக்கையாளருக்கு சிலிண்டர் வழங்கப்படும்போதே அதன் நிலை குறித்து முதலில் பரிசோதனை செய்யப்படும். பின்னாட்களில் ஏதேனும் விபத்து அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால் அதற்கு காப்பீடு வழங்கப்படுகிறது. பொருட்சேதம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும்.

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சிலிண்டர் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு FIR காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் போன்றவை தேவைப்படும்.

Kokila

Next Post

அசத்தல்..! கிராம சபைக் கூட்டத்தில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...

Sun Oct 1 , 2023
காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம […]

You May Like