புனேவின் கோந்த்வா பகுதியில் வசித்து வருபவர் ஃபெரோஸ் ஷேக் (வயது 32). இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இவர் புனேவில் இருந்து நாக்பூருக்கு கடந்த திங்கள்கிழமை அன்று விமானத்தில் பயணித்துள்ளார். அதே விமானத்தில் சந்திராபூரைச் சேர்ந்த 40 வயதாகும் ஆசிரியை ஒருவர் பயணித்துள்ளார். அவரது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய நாக்பூருக்குச் சென்று கொண்டிருந்தார். தந்தை இறந்த சோகத்தில் அரை மயக்க நிலையில், விமானத்தில் ஏறிய உடனேயே ஆசிரியை தூங்கிவிட்டார்.
அப்போது விமானத்தில் ஜன்னல் ஓரத்தில் ஆசிரியையின் அருகில் அமர்ந்திருந்த ஃபெரோஸ் ஷேக், திடீரென சுய இன்பம் செய்து அசிங்கமாக செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த ஆசிரியை பார்த்தபோது அந்த இளைஞர், சுயஇன்பம் செய்து அசிங்கமாக செய்கை காட்டியதை கண்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்து அலறினார் ஆசிரியை. இதையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். அப்போது நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.
உடனே விமான பணிப்பெண்களை அழைத்து நடந்ததை கூற முயன்றுள்ளார்கள். அதற்குள் விமானம் தரையிறங்கியது. இதையடுத்து கனநிமிடத்தில் விமானத்தில் இருந்து இறங்கி தப்பி ஓட ஃபெரோஸ் ஷேக் முயன்றுள்ளார். இதையடுத்து பெண்கள் கூச்சலிட்டனர். உடனடியாக சிஐஎஸ்எப் காவலர்கள், ஃபெரோஸ் ஷேக்கை கையும் களவுமாக பிடித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவம் அனைத்தையும் ஆசிரியை கூறினார். பின்னர், உடனடியாக ஃபெரோஸ் ஷேக்கை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.