நாடு முழுவதும் இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை நிறுத்தம்…!

post office digital payment 2025 06 29 12 38 04 1

நாடு முழுவதும் இன்று முதல் ஸ்பீட் போஸ்ட் ( விரைவு அஞ்சல்) மூலம் தான் அனுப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் இன்று முதல், தபால் துறை, செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும், விரைவு அஞ்சல் மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைகளை நினைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அம்சங்களைச் சேர்ப்பதற்கும் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் படி, அஞ்சல் சேவைகள் மற்றும் அஞ்சல் செயலாக்கத்தின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைப்பது, விநியோக சேவைகளை தரப்படுத்துவது மற்றும் செயல்பாட்டு செலவுகளைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு, விரைவான விநியோகத்துடன் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்கும் உதவும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 11.84 கோடி விரைவு மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல்களைக் கையாண்டுள்ளது. அஞ்சல் செயல்பாடுகளை இணைத்தல் மற்றும் மறுசீரமைப்பதற்கான முதல் படியாக, வட்டம் ஒருங்கிணைந்த அஞ்சல் செயலாக்க மையங்களை நிறுவத் தொடங்கியுள்ளது. உதாரணமாக, சென்னையில் மட்டும், வெவ்வேறு பகுதிகளில் 14 அஞ்சல் செயலாக்க அலுவலகங்கள் உள்ளன. ஒருங்கிணைந்த அஞ்சல் செயலாக்க மையத்தை நிறுவுவதற்கு நம்பிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இது அஞ்சல்களை வரிசைப்படுத்தி அனுப்ப தானியங்கி அமைப்புகளைப் பயன்படுத்தும் மற்றும் செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கும். இந்த திட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது

Vignesh

Next Post

ஒரே நாளில் 100 பேர்.. மாற்று கட்சியினரை கொத்தாக தூக்கிய செந்தில் பாலாஜி..!!

Mon Sep 1 , 2025
Senthil Balaji who killed 100 people in one day.. alternative party members in droves..!!
senthil balaji

You May Like