பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன், விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகமானவர். இவர், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூருவில் வளர்ந்த தீபிகா, கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார். கடந்த 2006இல் முதன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். 2007இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி படத்தோடு இந்தியா முழுவதும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.
பின்னர், இந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இதற்கிடையே, கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது. குறிப்பாக, அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம வைரலாக பரவியது.
பின்னர், தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படுக்கையறை ரகசியங்களை கூறி முகம் சுளிக்க வைத்துள்ளார். அதாவது, ”உடலுறவின் போது எடுத்த எடுப்பிலேயே உதடு மற்றும் கழுத்து பகுதிகளில் முத்தம் கொடுக்கும் ஆண்களை விட பாதத்தில் இருந்து உச்சி வரை முத்தம் கொடுக்கும் ஆண்களை தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” என கூறியிருக்கிறார்.