தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடன் உதவி…! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்…?

tn Govt subcidy 2025

மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றார்கள். இதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக அந்தந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அவர்கள் அருகமையில் இருக்கும் இ-சேவை மையத்தின் வாயிலாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் மனு செய்ய ஆவணம் செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அலெர்ட்!. போஸ்ட் ஆபீஸ் SMS மோசடி!. லிங்கை டச் பண்ணா மொத்தமும் போச்சு!. எச்சரிக்கும் PIB!.

Mon Sep 15 , 2025
இந்தியா போஸ்டில் இருந்து வந்ததாகக் கூறிக்கொள்ளும் ஒரு போலி எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது, இது சந்தேகத்திற்கிடமான இணைப்பு மூலம் பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்குமாறு வலியுறுத்துகிறது. இது ஒரு மோசடி என்பதை PIB (Press Information Bureau) உண்மைச் சரிபார்ப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்தியா போஸ்ட் அத்தகைய செய்திகளை அனுப்புவதில்லை. PIB, அதன் அதிகாரப்பூர்வ X தளத்தில், இந்திய போஸ்ட் ஆபீஸிலிருந்து உங்களுக்கு ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. […]
Post Office SMS Fraud

You May Like