25 ஆண்டுகள் பணி நிறைவடைந்த பின் மட்டுமே முழுமையான ஓய்வூதிய பயன்கள் கிடைக்கும்…!

money Pension 2025

பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கான தெரிவை மத்திய குடிமைப் பணி விதிகள், 2025 வழங்குகின்றன என மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டப் பயன்களை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவது தொடர்பாக பணி வரைமுறை செய்வதற்கான மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட அமலாக்கம்) விதிகள் 2025-ஐ 2.09.2025 அன்று மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.

அரசுப் பணியில் 20 ஆண்டுகள் நிறைவு செய்தபின், விருப்ப ஓய்வு பெறுவதை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் தெரிவு செய்ய இந்த விதிகள் வகை செய்கின்றன. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின் மட்டுமே முழுமையான ஓய்வூதியப் பயன்கள் கிடைக்கும். இருப்பினும் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக பணி நிறைவு செய்து விருப்ப ஓய்வு கோருவோருக்கு முழுமையான ஓய்வூதியப் பயன்கள் 25-ஆல் வகுக்கப்பட்டு சந்தாதாரருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சிலர் ஏன் ஒருபோதும் உடலுறவு கொள்வதில்லை? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி காரணம்!.

Fri Sep 19 , 2025
உடல் ரீதியான நெருக்கம் இல்லாமல் வாழ்க்கை இருக்க முடியுமா? ஆம், ஒருபோதும் உடலுறவு கொள்ளாத பெரியவர்கள் பலர் உள்ளனர். விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வில் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பிரிட்டனைச் சேர்ந்த 400,000 பேரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 13,500 பேரும் ஈடுபட்டனர். உடலுறவு கொள்ளும் பெரியவர்களுக்கும் ஒருபோதும் உடலுறவு கொள்ளாதவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். தேசிய அறிவியல் அகாடமியின் (PNAS) இதழில் வெளியிடப்பட்ட […]
sex life

You May Like