மத்திய அரசின் ECIL நிறுவனத்தில் வேலை.. ரூ.31,000 சம்பளம்.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!!

job 7

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (ECIL) பல்துறைகளில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி பதவியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த முறையில் 4 ஆண்டுகள் காலத்திற்கு நிரப்பப்பட உள்ளன.


கல்வித்தகுதி:

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கீழ்க்காணும் பொறியியல் துறைகளில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

  • எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன்
  • எலெக்ட்ரானிக்ஸ்
  • EEE (Electrical and Electronics Engineering)
  • ETC (Electronics and Telecommunication)
  • E&I (Electronics and Instrumentation)
  • எலெக்ட்ரிக்கல்
  • கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)
  • தகவல் தொழில்நுட்ப பொறியியல் (IT)
  • மெக்கானிக்கல்

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் துறையில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் துறைக்கு தொடர்புடைய குறைந்தது 1 வருட தொழிற்சார் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில் 1 வருட தொழிற்பயிற்சி அனுபவமாக கருதப்படும்.

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

சம்பளம்: இப்பதவிக்கு தேர்வுச் செய்யப்படும் நபர்களுக்கு முதல் வருடம் மாதம் ரூ.25,000 வழங்கப்படும். இரண்டாம் வருடம் ரூ.28,000, மூன்று மற்றும் நான்காம் வருடம் மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால் எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதார்களில் இருந்து மதிப்பெண்கள் அடிப்படையில் 4இல் இருந்து 1 என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். 10-ம் வகுப்பு மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்குதேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் இடம்: ஹைதராபாத்

பணி நியமனம்: ஹைதராபாதில் வழங்கப்படும்

மதிப்பீட்டு விகிதங்கள்:

  • கல்வித்தகுதி: 20%
  • பணி அனுபவம்: 30%
  • நேர்காணல்: 50%
  • இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

விண்ணப்ப விவரம்: ஆர்வமுள்ளவர்கள் பொறியாளர்கள் https://www.ecil.co.in/ என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏதும் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் 22.09.2025.

Read more: பரபரப்பை கிளப்பிய கிட்னி திருட்டு வழக்கு… தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு…!

English Summary

Job at ECIL, a central government company.. Salary Rs. 31,000.. Engineering graduates can apply..!!

Next Post

புற்றுநோய்க்கான அதிசய மருந்து இந்த மரத்தின் இலையில் உள்ளது! புதிய ஆய்வில் வெளியான குட்நியூஸ்!

Sat Sep 20 , 2025
புற்றுநோய் என்ற ஆபத்தான நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் இந்த நோய்க்கு ஒரு பயனுள்ள மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். இப்போது, ​​புற்றுநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஒரு பெரிய நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. அது ‘பேரிக்காய் மர இலை’ வடிவில் உள்ளது.. ஆம், நீங்கள் படித்தது சரிதான். இந்த பேரிக்காய் மர இலையில் கொடிய கல்லீரல் […]
Natural Killer Cell Destorying Cancer Cell Illustration 1

You May Like