வடமேற்கு வெனிசுலாவில் நேற்று (புதன்கிழமை) 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் புள்ளி, சுலியா மாநிலத்தில் உள்ள மேனே கிராண்டே (Mene Grande) என்ற பகுதியின் கிழக்கு-வடகிழக்கு திசையில் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில் அமைந்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் கரக்காஸிலிருந்து 370 மைல்கள் (600 கிலோமீட்டர்கள்) மேற்குப் பகுதியில் உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 மைல்கள் (7.8 கிலோமீட்டர்கள்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பல மாநிலங்களில் மற்றும் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. எல்லை பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பல வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் உடனடி சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் நடந்தபோதும், அதற்குப் பிறகும், ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவின் தலைமையில் ஒளிபரப்பாகிய அறிவியல் சார்ந்த நிகழ்ச்சி உட்பட, அனைத்து நிகழ்ச்சிகளும் தொடரப்பட்டன.
நிலநடுக்கம் குறித்து வெனிசுலா தகவல் தொடர்பு அமைச்சர் ஃப்ரெடி நானெஸ் டெலிகிராம் செயலியில், நிலநடுக்கம் குறித்து வெனிசுலா அமைச்சர் கூறியது இங்கே
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தகவல் தொடர்பு அமைச்சர் ஃப்ரெடி நானெஸ் டெலிகிராம் செயலியில், மாநிலத்தின் வெனிசுலா தொழில்நுட்ப ஆராய்ச்சி அறக்கட்டளை 3.9 மற்றும் 5.4 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்களைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்தார், ஆனால் USGS குறிப்பிட்ட நிலநடுக்கத்தைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. இரண்டில் பலவீனமானது ஜூலியா மாநிலத்தில் நிகழ்ந்தது என்றும், மற்றொன்று பரினாஸ் மாநிலத்தில் நிகழ்ந்தது என்றும் அவர் கூறினார்.
மெனே கிராண்டே, நாட்டின் எண்ணெய்த் தொழிலுக்கு முக்கியமான பகுதியான மரகைபோ ஏரியின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது. வெனிசுலா உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: பட்டாவில் மாற்றம் செய்ய வேண்டுமா..? இனி ஒரே நாள் போதும்..!! அமைச்சர் ரகுபதி சொன்ன குட் நியூஸ்..!!