உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் மாமியாருடன் மருமகன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த விபரீதத்தின் உச்சமாக, மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரமோத் என்பவருக்கும், சிவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் வெடித்தன.
இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம், பிரமோத்தின் கள்ளக்காதல்தான். அதாவது, பிரமோத் அடிக்கடி தனது மனைவி சிவானியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். அப்போது பிரமோத்துக்கும், அவரது மாமியாருக்கும் கள்ளத்தொடர்பு மலர்ந்துள்ளது.
இதன் விளைவாக, பிரமோத் தனது மனைவி சிவானியைப் புறக்கணித்துவிட்டு, அடிக்கடி மாமியார் வீட்டிற்குச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் அவ்வப்போது பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். மாமியார் – மருமகன் என்பதால், ஆரம்பத்தில் யாருக்கும் பெரிய அளவில் சந்தேகம் வரவில்லை. ஆனால், கணவரின் நடத்தையில் சிவானிக்கு சந்தேகம் வலுத்தது. அவர் பிரமோத்தின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்.
அப்போதுதான், பிரமோத் தனது தாயுடன் கள்ளக்காதல் வைத்திருப்பது சிவானிக்குத் தெரிய வந்தது. இந்த அதிர்ச்சியில் உறைந்த சிவானி, பிரமோத் தனது மாமியாருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியபோது, சிவானி மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அவர் கணவர் பிரமோத் மற்றும் தாயிடம் சண்டையிட்டுள்ளார். ஆரம்பத்தில் குடும்பத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். இருப்பினும், பிரமோத் தனது மாமியாருடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் சிவானிக்கும் பிரமோத்துக்கும் இடையே அடிக்கடி கடும் சண்டைகள் வந்துள்ளது.
கள்ளக்காதலை தொடர விரும்பிய பிரமோத், மனைவி சிவானி உயிருடன் இருந்தால் அது சாத்தியமில்லை என்று எண்ணினார். இதன் விளைவாக, மனைவி சிவானியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சண்டை வெடித்தபோது, ஆத்திரமடைந்த பிரமோத், சிவானியை ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள பிரமோத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்தக் கொலையில் சிவானியின் தாய்க்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : இதை மட்டும் மாற்றினால் உடனே 3 கிலோ வரை உடல் எடை குறையும்..!! செம ரிசல்ட்..!! டிரை பண்ணி பாருங்க..!!