கரூர் துயர வழக்கு.. தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவு..!

karur tragedy another tvk executive

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..


இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் கடந்த 5-ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வந்தது.

இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது..  உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம் வெளியாகி உள்ளது.. அதன்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணைய விசாரணையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் சமர்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை எழுத்துப்பூர்வமாக விசாரணைக்குழு சமர்பித்துள்ளது. இந்த ஆவணங்களையு நீதிபதி கையெழுத்திட்டு நீதிபதி பெற்றுக் கொண்டார்..

இந்த நிலையில் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.. மற்றொரு தவெக நிர்வாகி பவுன்ராஜுக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இருவருக்கும் காவல் நீட்டிப்பு இல்லாமல் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Read More : கரூர் துயரம்.. யாரையும் பலிகடா ஆக்குவது நோக்கம் இல்லை.. ஆனா இது அரசின் கடமை.. முதல்வர் ஸ்டாலின்!

RUPA

Next Post

சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல்? உண்மை என்ன? தமிழக அரசு விளக்கம்..

Wed Oct 15 , 2025
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. […]
Tn Govt 2025

You May Like