ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 20) அதிகாலை எமிரேட்ஸ் போயிங் 747 சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்ததில் விமான நிலைய ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் துபாயில் இருந்து விமானம் வந்த சிறிது நேரத்திலேயே, விபத்துக்குள்ளானது. ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மற்றவர் பின்னர் மருத்துவமனையில் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
என்ன நடந்தது? ஏபிசி செய்தியின்படி, விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்ததால் தரைவழி வாகனத்தின் மீது மோதியிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். சரக்கு விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் மீட்கப்பட்டு, லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டதாகவும், அவசர சேவைகள் மற்றும் டைவர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் ஹாங்காங் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் அவசர மையம் செயல்படுத்தப்பட்டது, மேலும் வடக்கு ஓடுபாதை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. விமானக் கண்காணிப்பு தளமான FlightRadar24 இன் படி, எமிரேட்ஸ் 747 ஓடுபாதையை விட்டு வெளியேறி தண்ணீரில் மோதியபோது சுமார் 49 நாட்ஸ் வேகத்தில் பயணித்தது. ஓடுபாதையின் முடிவில் விமானத்தின் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காட்டும் வீடியோ பரவி வருகின்றன.



