தமிழகமே…! 27-ம் தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!

patta 2025

சுபமுகூர்த்த நாளான 27ம் தேதி மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு.


மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளான 27.10.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கால்சியம் குறைபாடா..? மூட்டு வலியா..? பல நோய்களை தீர்க்கும் அருமருந்து..!! சீம்பாலை இப்படி செஞ்சி சாப்பிடுங்க..!!

Sun Oct 26 , 2025
கிராமப்புறச் சூழலில் வளர்ந்தவர்களுக்கு இளம் மஞ்சள் நிறத்தில், ஏலக்காய் மற்றும் சுக்கு மணத்துடன் கூடிய சீம்பாலின் சுவை அலாதியானது. இன்றைய நகரங்களில் செயற்கை முறையிலும் சீம்பால் விற்கப்பட்டாலும், பசு வளர்ப்பாளர்களிடம் இருந்து நேரடியாகப் பெறும் கலப்படம் இல்லாத கெட்டியான சீம்பாலே உண்மையான சத்துக்களைக் கொண்டது. குழந்தை பிறந்தவுடன் தாயிடமிருந்து முதலில் சுரக்கும் நோய் எதிர்ப்புச் சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் (கொலஸ்ட்ரம்) எவ்வளவு முக்கியமோ, அதேபோன்ற முக்கியத்துவம் கன்று ஈன்ற பசுவின் […]
Seembaal 2025

You May Like