100 அடி நீர்வீழ்ச்சி நேரடியாக தீர்த்தக்குளத்தில் சேரும் அதிசயம்.. திருப்பதி மலை அடிவாரத்தில் இப்படி ஒரு கோவிலா..?

temple 2 1 1 1

திருப்பதி என்றாலே பெரும்பாலோருக்குத் தோன்றுவது ஏழுமலையான் கோவில் தான். ஆனால், அந்த புனித நகரத்தின் அடிவாரத்தில், சிவபெருமானை வழிபடும் பண்டைய கபிலேஸ்வரர் கோவில் இருப்பதை அனைவரும் அறியமாட்டார்கள்.


புராண கதைகளின்படி, சாகர் மன்னன் உலக ஆதிக்கம் பெற அஸ்வமேத யாகம் நடத்தினார். அதைத் தடுக்க இந்திரன், மன்னனின் பலிக்குதிரையை திருடி, தியானத்தில் இருந்த முனிவர் கபிலரின் அருகே கட்டிவிட்டு மறைந்தார். குதிரையைத் தேடி வந்த சாகரனின் மகன்கள் முனிவரை குற்றவாளி என எண்ணி அவமதித்தனர்.

தியானம் குலைந்த கபில முனிவர் கண்களைத் திறந்ததும், அவரது தபசக்தி தீயாகி மன்னனின் அறுபதாயிரம் மகன்களையும் எரித்துவிட்டது என புராணம் கூறுகிறது. பின்னர், தன் கோபத்தால் ஏற்பட்ட பாவத்தை போக்க முனிவர் கடும் தவம் செய்து, சிவபெருமானை தரிசனம் செய்ததாக நம்பப்படுகிறது.

கோவிலின் சிறப்புகள்:

* அந்த தரிசனத்தின் போது, சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளித்தார்.

* கோவில் காமாட்சி அம்மன், விநாயகர், முருகன், கிருஷ்ணர் சன்னதிகள் உடன் பராமரிக்கப்படுகிறது.

* ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி, பிரம்மோத்ஸவம், விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கபிலத்தீர்த்தம், 100 அடி உயரத்தில் இருந்து விழும் நீர் நேரடியாக தீர்த்தக்குளத்தில் சேர்கிறது. மழைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இங்கு வருவர். பக்தர்கள் நம்புகின்றனர், புனித நீரில் மூழ்கி எழுபவர்களின் பாவங்கள் நீங்கும்.

ஏழுமலையான் கோவிலின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அதே மண்ணில் சிவபெருமானின் தெய்வீக சக்தி இந்த இடத்தில் தங்கியிருக்கும். திருமலைக்கு வரும் ஒவ்வொருவரும் கபிலேஸ்வரரையும் தரிசிக்க வேண்டும் என்ற நம்பிக்கை தலைமுறைகளைத் தாண்டியும் இன்று தொடர்கிறது.

Read more: இனி மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு கிடையாது.. வெளியான முக்கிய அப்டேட்..!

English Summary

The miracle of a 100-foot waterfall directly flowing into the Tirupati pond.. Is there a temple like this at the foot of the Tirupati hill..?

Next Post

மக்களே..! 110 கி.மீ வேகத்தில் காற்று... சென்னை உள்ளிட்ட 6 மாவட்டத்தில் கனமழை...!

Mon Oct 27 , 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 780 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது இன்று தென்மேற்கு […]
Cyclone 2025 1

You May Like