ரூ.1,60,000 சம்பளம்.. மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் வேலை.. சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

job 7

மத்திய அரசின் மின்சாரத் துறையின் கீழ் இயங்கும் பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது சட்டப் பயிற்சி அதிகாரி (Officer Trainee – Law) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அனுபவம் தேவையில்லை; சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள்:

பயிற்சி அதிகாரி (சட்டம்) – 7

வயது வரம்பு: பயிற்சி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 05.12.2025 தேதியின்படி, 28 வயதை நிரம்பி இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு 3 ஆண்டு எல்.எல்.பி அல்லது 5 ஆண்டு ஒங்கிணைந்த சட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

* பயிற்சி அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளம் ரூ.40,000. இதனுடன் 12 சதவீத வீட்டுக்கால கொடுப்பனை (HRA), அகவிலைப்படி (DA), போக்குவரத்து மற்றும் இதர நலன்களும் வழங்கப்படும்.

* இதனால் பயிற்சி காலத்தில் வருடத்திற்கு சுமார் ரூ.11 லட்சம் வருமானம் கிடைக்கும்.

* பயிற்சி வெற்றிகரமாக முடித்த நபர்கள் நிர்வாகப் பிரிவில் (Executive cadre) நியமிக்கப்படுவார்கள். அப்போது சம்பள அளவு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கும். இதனுடன் அனைத்து அலவன்ஸ்கள் மற்றும் ஊதியப் பாகங்களும் சேர்ந்து வருடத்திற்கு சுமார் ரூ.22.50 லட்சம் வருமானம் கிடைக்கும்.

* பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய நிதி, விடுப்பு பயண கொடுப்பனை (LTC), மற்றும் ஊழியர் நலன்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை;

* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயமாக முதுகலை சட்டப் படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வு (CLAT – 2026) எழுத வேண்டும். அந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் அடுத்த கட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

* பொதுப் பிரிவினருக்கு (General category): குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற வேண்டும்.

* மற்ற பிரிவினருக்கு (SC/ST/OBC/PwBD): குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெறுவது அவசியம்.

* கிளாட் தேர்வு மதிப்பெண்கள் 85 சதவீதம், குழு கலந்துரையாடல் 3 சதவீதம் மற்றும் நேர்காணல் 12 சதவீதம் என்ற அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

* தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு (Medical Examination) உட்படுத்தப்படுவார்கள். இதன் முடிவின் அடிப்படையில் இறுதி நியமனம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள விண்ணப்பதார்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் கிளாட் தேர்வு விண்ணப்ப பதிவு எண் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 05.12.2025.

Read more: “மும்பையை விழுங்க வரும் அனகோண்டா”..!! அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே..!!

English Summary

Salary of Rs. 1,60,000.. Job at the Central Government Power Grid Corporation.. Law graduates can apply..!!

Next Post

தீவிரப் புயலாக மாறியது மோன்தா.. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. இங்கெல்லாம் கனமழை கொட்டும்!

Tue Oct 28 , 2025
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இது ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.. இந்த தீவிரப்புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. மேலும் இந்த புயல் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் […]
Montha Cyclone

You May Like