நாட்டிலேயே பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களில் கேரளாவும் ஒன்று, என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. கேரளாவிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு மற்றும் கேரள அரசிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், இந்தக் கருத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. கேரளாவில் நிலவி வரும் மோசமான பொருளாதார சூழ்நிலைகளுக்கு தவறான நிர்வாகமே காரணம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் […]

கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வகையில் எச்.பி.வி தடுப்பூசிகளை, 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அதிகமாக உள்ள புற்றுநோய்யாக இந்த கருப்பை வாய்ப்புற்று நோய் கருதப்படுகிறது. இந்நிலையில் இது ஏற்படாமல் தடுக்க 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. […]

மருந்து உற்பத்தி தொடர்பான திருத்தப்பட்ட ‘அட்டவணை எம்’ வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தி தொழில் நிறுவனங்கள் ‘அட்டவணை எம்’ விதிமுறையை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘அட்டவணை எம்’ என்பது மருந்துகளின் முறையான உற்பத்தி நடைமுறைகள் தொடர்பான மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940ன் ஒரு பிரிவு. இது தர உத்தரவாதத்தினை வலுப்படுத்துவதையும், உலகளாவிய மருந்து உற்பத்தி மையமாக விளங்கும் […]

ஆன்லைன் லோன் செயலிகளில் கடன் பெற்றவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மோசடி கடன் செயலிகள் மூலமே அதிகளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை திருடி அவற்றை ஆபாசமாக சித்தரிப்பது, கைப்பேசியில் உள்ள உறவினர்கள், நண்பர்களின் தொடர்பு எண்களை திருடி, அவர்களிடம் கடன் […]

டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,”தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய மொத்தம் 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மழை […]

பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மத்திய அரசின் கம்ப்யுட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In)எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக CERT-In வெளியிட்டுள்ள குறிப்பில், CIVIN-2023-0360-இல் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ். கொண்ட சாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடுகள் ஹேக்கர்களுக்கு பயனர்களின் மிகமுக்கிய தகவல்களை அபகரிக்கும் வசதியை வழங்க வாய்ப்பளிக்கும் என்று CERT-In ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து […]

இந்த வருடத்தின் இறுதியில் வங்கியில் பணியாற்றுபவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கி ஊழியர்களுக்கான ஊதியம் 17 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது தற்போது வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் புறப்பட்டு வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் […]

2025 அக்டோபர் 1 முதல் லாரி ஓட்டுநர்களின் இருக்கையில் ஏசி வசதியை கட்டாயமாக்கி மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வௌியாகி உள்ளது. சரக்கு லாரி ஓட்டுநர்களின் கேபின் குளிரூட்டப்படுவது கட்டாயமாக்கப்படும் என மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜுலை மாதம் தெரிவித்திருந்தார். இதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் ஏற்படும். குளிரூட்டப்பட்ட கேபின் வைக்க அதிகம் செலவாகும் என்பதால் லாரிகளின் விலையும் அதிகரிக்கும் என […]

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. நேற்று இந்த புயல் கரையை கடந்துள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற […]

நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மோசடியுடன் தொடர்புடைய 70 லட்சம் செல்போன் இணைப்புகளை இடைநீக்கம் செய்திருப்பதாக நிதி சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி தெரிவித்திருக்கிறார். அதிகரித்து வரும் இணையதள மோசடிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பருவத்தினை மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய நிதி சேவைகள் செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத் துறை அதிகாரிகள் தகவல் […]