இரவில் தூக்க குறைபாடு ஏற்படுவதற்கு வாஸ்து முக்கிய காரணமாக இருக்கலாம். அதற்கு படுக்கையறையில் சில வாஸ்து மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
படுக்கையறையில் கண்ணாடி: படுக்கையறையில் கண்ணாடியை தவறுதலாக கூட வைக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த அறையில் கண்ணாடியை வைப்பது தூக்கத்தைக் கெடுக்கும். அதை அகற்ற முடியாவிட்டால், இரவில் தூங்கும் போது கண்ணாடியை ஒரு துணியால் மூட வேண்டும். மேலும், படுக்கையறையில், தவறுதலாக கூட, துடைப்பத்தை வைக்கக்கூடாது.
மின்னனு பொருட்கள்: பலர் தங்கள் படுக்கையறைகளில் தொலைக்காட்சி அல்லது கணினி போன்ற மின்னணு பொருட்களை வைத்திருப்பார்கள், ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி இது நல்லதாக கருதப்படுவதில்லை. எனவே, இந்த பொருட்களை உங்கள் படுக்கையறையில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவ்வாறு செய்வது தூக்கமின்மை அபாயத்தை அதிகரிக்கிறது.
படுக்கையின் சரியான திசை: வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டில் படுக்கையறையின் வடகிழக்கு திசையில் படுக்கையை ஒருபோதும் வைக்கக்கூடாது. இது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து, சரியாகத் தூங்குவதைத் தடுக்கலாம்.
படுக்கையில் சாப்பிட கூடாது: படுக்கையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டாம். அவ்வாறு செய்வது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து நல்ல தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும். இதைச் செய்வது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும், இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
நெய் விளக்கு: நீங்கள் அடிக்கடி தூக்கத்தின் நடுவில் விழித்தால், தூங்குவதற்கு முன் உங்கள் படுக்கையறையில் நெய் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கை மரத்தால் செய்யப்பட வேண்டும். சதுர வடிவ படுக்கையில் தூங்குவதும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
தண்ணீர் பாட்டில்: படுக்கையறையில் தண்ணீர் பாட்டில் அல்லது வேறு எந்த பாத்திரத்தையும் ஒருபோதும் வைத்திருக்க வேண்டாம். உண்மையில், தண்ணீர் மனதையும் மூளையையும் எதிர்மறையாக பாதிக்கிறது. அது தூக்கத்தை சீர்குலைக்கிறது. எனவே.. தாகம் எடுத்தால்.. எழுந்து தண்ணீர் குடிப்பது நல்லது.



