முதல் மனைவியின் சம்மதம் இன்றி இரண்டாவது திருமணம் செய்ய கூடாது..!! நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு!

marriage divorce 2167e762 eb0b 11e9 ae8a 39ff32977a8f

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது இஸ்லாமிய நபர் 38 வயது பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், 2வது திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். உடனே இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.


அந்த மனுவில், “இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்ய அனுமதி உள்ளதால், தன்னுடைய 2-வது திருமணத்தை பதிவு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல், ஒரு இஸ்லாமிய ஆண் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய முடியாது.

திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, முதல் மனைவியின் கருத்தை கேட்க வேண்டும். அவர் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திருமணத்தை பதிவு செய்யக் கூடாது. அடிப்படை உரிமைகள் என்பது மத உரிமைகளை விட முக்கியமானவை,” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், “இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் ஒருவருக்கு மேற்பட்ட மனைவிகளை சமமாக நடத்தும் திறன் இருந்தாலேயே பல திருமணம் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் அந்த சமத்துவம் நடைமுறையில் சாத்தியமில்லை. ஒரு இஸ்லாமிய பெண் தன்னுடைய கணவரின் இரண்டாவது திருமணத்தில் வெறும் பார்வையாளராக அமைதியாக இருப்பதை அனுமதிக்க முடியாது ” எனவும் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இந்தத் தீர்ப்பு, மதச் சட்டங்களும், பெண்களின் அடிப்படை உரிமைகளும் இடையே சமநிலையை வகுத்து காட்டும் ஒரு முக்கிய நீதிமுறை முடிவாகப் பார்க்கப்படுகிறது.

Read more: Breaking : உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் நறுக்கென குட்டியது.. முதல்வருக்கு மறந்துவிட்டதா? விஜய் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!

English Summary

A second marriage cannot be entered into without the consent of the first wife.. Important verdict given by the court..!

Next Post

”விஜய் பேச்சை எல்லாம் மக்கள் கண்டுக்க மாட்டாங்க.. இது தவறான புரிதல்” விளாசிய பிரபலம்!

Wed Nov 5 , 2025
தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய விஜய் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டு வைத்ததாகவும், 2026 தேர்தல் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.. மேலும் “ இன்று மக்களுக்கு இந்த அரசு மீது உள்ள நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.. இதுவாவது முதல்வருக்கு புரியுதா? அப்படி புரியவில்லை எனில் 2026 தேர்தலில் மக்கள் ஆழமாக மக்கள் புரியவைப்பார்கள்.. […]
TVK Vijay new

You May Like