fbpx

அரபிக்கடலில் அட்னன்ஸ் போடும் புதிய புயல்..!! தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் கனமழை..!! வானிலை அலர்ட்..!!

இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலிமை அடைகிறது. இது நேற்று முதல்நாள் பிற்பகல் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதனால், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மதுரை, தென்காசி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (டிசம்பர் 13) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Chella

Next Post

இன்று முதல் நாடு முழுவதும் தபால் நிலையங்கள் இயங்காது..!! பொதுமக்கள் கடும் அவதி..!!

Tue Dec 12 , 2023
இன்று முதல் நாடு முழுவதும் தபால் நிலைய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கமலேஷ் சந்திரா ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளதால் நாடு முழுவதும் தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்ததை உடனே அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கிராமிய […]

You May Like