காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவிலில், வருகிற டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது முதலே சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தருவார்கள்.
இதனை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி காரைக்காலில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.