மத்திய அரசு வேலைங்க… டிகிரி முடித்தால் போதும்.. ரூ.1,27,480 வரை சம்பளம்..!! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..

Govt Job 2025

மத்திய அரசின் மக்கள் தொகை ஆராய்ச்சி மையத்தில் (Population Research Centre) பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையம், உதவிப் பேராசிரியர் முதல் எழுத்தர் வரை மொத்தம் 6 வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.


பணியிட விவரம்:

உதவிப் பேராசிரியர் (Assistant Professor) – 1 இடம்

* கல்வித் தகுதி: மக்கள் தொகையியல் / புள்ளியியல் / பொருளாதாரம் பிரிவில் முதுகலைப் பட்டம் (UGC விதிகளின்படி)

* சம்பளம்: ரூ.57,700 – ரூ.1,82,400 வரை

ஆராய்ச்சி புலனாய்வாளர் (Research Investigator) – 1 இடம்

* கல்வித் தகுதி: மக்கள் தொகையியல் / புள்ளியியல் / சமூகப் பணி பிரிவில் முதுகலைப் பட்டம்

* சம்பளம்: ரூ.44,570 – ரூ.1,27,480 வரை

புலன் புலனாய்வாளர் (Field Investigator) – 2 இடங்கள்

* கல்வித் தகுதி: மக்கள் தொகையியல் / புள்ளியியல் / பொருளாதாரம் பிரிவில் முதுகலைப் பட்டம்

* சம்பளம்: ரூ.32,670 – ரூ.1,01,970 வரை

எழுத்தர் / தட்டச்சர் (LDC / Typist) – 1 இடம்

* கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Degree)

* சம்பளம்: ரூ.37,747 வரை

ஆராய்ச்சி உதவியாளர் – II (Research Fellow – II) – 1 இடம்

* கல்வித் தகுதி: மக்கள் தொகையியல் / புள்ளியியல் / சமூகவியல் பிரிவில் முதுகலைப் பட்டம்

* சம்பளம்: ரூ.25,000 வரை.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் முதல் 42 வயதுக்கு மேற்படாதவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் குறுகிய பட்டியலிடல் (Short Listing) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்கேற்ப கணினி திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இறுதி நியமனம் நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://mohfw.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பதிவாளர், மத்திய நிர்வாக அலுவலகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் – 530003. (The Registrar, Central Administrative Office, Andhra University, Visakhapatnam – 530003.) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி: விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் நவம்பர் 25, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 5 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் சம்பாதிக்கலாம்! அசத்தல் திட்டம்..! மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

English Summary

Applications are invited from eligible candidates for various posts at the Population Research Centre, Government of India.

Next Post

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களுக்கு ஆபத்தா..? கவனம்.. வேறு பல பிரச்சனைகளும் ஏற்படலாம்!

Wed Nov 12 , 2025
தண்ணீர் நமது உடலுக்கு இன்றியமையாத உயிர்நாடி. நீர் நமது உடலில் திரவ சமநிலையை பராமரித்தல், சீரான செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. இருப்பினும், அதிகமாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆபத்தானது, ஏனெனில் எதையும் அதிகமாக குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக அதிக தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிபுணர்கள் இது […]
w 1280h 720imgid 01k0enm0y9awan7d7w30vdnvq8imgname water 1 1752839095241

You May Like