சிறுமிகள், இளம்பெண்களை கடத்தி பலாத்காரம்..!! உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட வேலைக்காரன்..!! நாட்டையே உலுக்கிய சம்பவம்..!!

Crime 2025 6

உத்தரப்பிரதேச மாநிலம் நிதாரி பகுதியில் அமைந்துள்ள ஒரு பங்களாவில் வசித்து வந்த அதன் உரிமையாளர் மொகிந்தர் சிங் மற்றும் அவரது பணியாளர் சுரேந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த 19 வருடங்களாக ஏழை குடும்பங்களை சேர்ந்த பல சிறுமிகள் மற்றும் இளம் பெண்களைக் கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவர்களை கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.


கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் சிலவற்றை தனியாக வெட்டி, பங்களாவைச் சுற்றியுள்ள கால்வாய்களில் வீசியும், சில உடல் பாகங்களை குழி தோண்டி புதைத்துள்ளனர். சமீபத்தில், கால்வாயில் மிதந்த மண்டை ஓட்டை கண்ட ஒரு பெண், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், சோதனை செய்தபோது, அது பெண்களின் எலும்புக் கூடு என்பதை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பங்களாவின் உரிமையாளர் மொகிந்தர் சிங்கை கைது செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், உரிமையாளர் மொகிந்தர் சிங்கும், அவரது வேலைக்காரர் சுரேந்தரும் இணைந்து, நொய்டா பகுதியில் வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் குறித்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இவர், 16 வயதுடைய பெண்களை கொலை செய்த பிறகு, அவர்களது சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டதுடன், அந்தப் பெண்களின் சில உடல் உறுப்புகளை அறுத்துச் சாப்பிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கொடூரமான குற்றச் செயலின் ஆழம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள, காவல்துறையினர் உரிமையாளர் மொகிந்தர் சிங் மற்றும் பணியாளர் சுரேந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : 40 வயதில் சொந்த வீடு கனவா..? EMI + சேமிப்பு..!! இந்த விஷயங்களை மட்டும் மறந்துறாதீங்க..!!

CHELLA

Next Post

எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்கலயா? வெள்ளிக்கிழமை இந்த 2 பொருட்களையும் உங்கள் பர்ஸில் வைத்தால்.. செல்வம் பெருகும்!

Thu Nov 13 , 2025
வீடு, அலுவலகம் அல்லது கடை போன்ற எந்த பணியிடத்திலும் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், நேர்மறை ஆற்றல் எப்போதும் பிரகாசித்து வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக, நல்ல வருமானம் இருந்தபோதிலும், பணம் தங்கள் கைகளில் அமர்ந்திருப்பதில்லை என்றும், வீண் செலவுகள் அதிகரித்து வருவதாகவும் புகார் கூறுபவர்களுக்கு வாஸ்து நல்ல தீர்வுகளைக் கொண்டுள்ளது. வாஸ்து குறைபாடுகளால் பணம் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன […]
Purse Astroogy 2025 01 029d2a1bfa70bfdbc47d9ed156499089 1

You May Like