15 ரூபாயில் தொடங்கிய சம்பளம்.. 1,000 ஏக்கர் நிலம், 124 வீடுகளுக்கு சொந்தக்காரர்.. புதுக்கோட்டை அரசரால் தடை விதிக்கப்பட்ட பி.யு. சின்னப்பா..!!

PU Chinnappa 2025

தமிழ்த்திரை உலகின் வரலாற்றில் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் இணைந்து முன்னணி நட்சத்திர ஜோடியாக விளங்கியவர், முதல் ‘சூப்பர் நடிகர்’ என்று ரசிகர்களால் புகழப்பட்ட பி.யு. சின்னப்பா. புதுக்கோட்டையில் பிறந்த இவர், வெறும் 6 வயதில் நாடக வாழ்க்கையை தொடங்கி, 12 வயதில் மாத சம்பளமாக ரூ.15 பெற்றார். இவரது அபார பாடும் திறமையால், மதுரை ஓரிஜினல் போர்ஸ் கம்பெனி சம்பளத்தை ஒரேயடியாக ரூ.75 ஆக உயர்த்தியது.


நாடக மேடையில் ராஜபார்ட் கதாநாயகனாக புகழ் பெற்ற சின்னப்பா, குத்துச்சண்டை மற்றும் சிலம்பாட்டத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 190 பவுண்டுகள் எடையைத் தூக்கிச் சாதனை படைத்தவர். ‘சந்திரகாந்தா’ நாடகம் திரைப்படமாக உருமாறியபோது, அவர் சுந்தூராராஜாவாக அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் பாடவும், நடிக்கவும், சண்டைக் காட்சிகளில் திறம்படச் செயல்படவும் முடிந்த முதல் கதாநாயகன் இவரே. ‘உத்தமபுத்ரன்’, ‘கண்ணகி’, ‘ஜகதாலா பிரதாபன்’ போன்ற தொடர் வெற்றிப் படங்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பிற்காலத்தில் நடிகராக உயர்ந்த எம்.ஜி.ஆர். கூட இவரை குருவாக கருதினார்.

சின்னப்பா, திரைப்பட வாழ்க்கையில் கொட்டிக் குவித்த செல்வத்தால், புதுக்கோட்டையில் 124 வீடுகள் மற்றும் 1,000 ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தார். அவர் மேலும் வீடுகளை வாங்க முடியாதபடிக்கு புதுக்கோட்டை அரசர் தடை விதித்த அளவுக்கு சொத்துச் சேர்த்தார். ஆனால், இந்த உச்சத்தில் இருந்தபோதே, வெறும் 36 வயதில், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

அவர் கடுமையாக உழைத்து சேர்த்த கோடிக் கணக்கான சொத்துகள், அவரது மறைவுக்குப் பிறகு குடும்பத்துக்குக் கிடைக்கவில்லை. அவரது மனைவி சில சொத்துகளை விற்றுச் சென்னைக்கு வந்தாலும், மற்ற சொத்துகள் குடும்பத்தை கைவிட்டுச் சென்றன. அதாவது, மோசடியாளர்களிடம் சிக்கின.

குடும்பத்தின் இன்றைய நிலை :

சின்னப்பா தன் மகன் ராஜா பஹாதுர் ‘சிங்கம் போல் வாழ வேண்டும்’ என்று ஆசைப்பட்டார். மகன் திரையுலகில் நுழைந்தாலும், தந்தையைப் போலப் புகழடையவில்லை. ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் கறி வியாபாரி போன்ற சில வேடங்களில் நடித்து, அதுவே அவரது கடைசி படமாக அமைந்தது. குடும்பத்தின் எஞ்சிய சொத்துகளும் விற்கப்பட்டு, இறுதியில் கடனில் மூழ்கியது.

இன்று, தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோவான பி.யு. சின்னப்பாவின் நினைவாக புதுக்கோட்டையில் ஒரு நினைவுச்சின்னம் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதுவும் போதிய பராமரிப்பின்றி பாழடைந்து வருவது, இந்த மாபெரும் கலைஞனின் துயரமான வாழ்க்கை பயணத்தின் இறுதி குறிப்பாக உள்ளது.

Read More : உச்சம் தொட்ட முருங்கை விலை..!! ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை..!! தக்காளி விலையும் தாறுமாறாக உயர்வு..!!

CHELLA

Next Post

தாலியோட ஈரம் கூட காயல.. புதுமாப்பிள்ளைக்கு கனவிலும் நடக்க கூடாத சம்பவம்..! என்ன ஆச்சு..?

Mon Nov 24 , 2025
Even the moisture of the palm tree is gone.. An incident that should never have happened to a newlywed..! What happened..?
Marriage 2025 1

You May Like