டிட்வா புயல் மற்றும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முழுவதுமே மழை நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களும் அம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
Read more: நிச்சயதார்த்தம் ஆனதை மறைத்த இளம்பெண்.. காதலன் வெறிச்செயல்..!! தஞ்சையை உலுக்கிய பகீர் சம்பவம்..



