உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் ‘சோபி’ என்று பெயரிட்ட ஒரு AI ஆசிரியர் ரோபோவை உருவாக்கியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், இந்த ரோபோவை எப்படி உருவாக்கினார் மற்றும் அது என்ன செய்ய முடியும் என்பதை விவரித்தார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அந்த ரோபோ பல்வேறு பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைக் காணலாம்.
ரோபோவிடம் தன்னை அறிமுகப்படுத்தச் சொன்னபோது, அது “நான் ஒரு AI ஆசிரியர் ரோபோ. எனது பெயர் சோபி. என்னை ஆதித்யா உருவாக்கினார். நான் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள சிவ்சரண் இன்டர் கல்லூரியில் கற்பிக்கிறேன்… ஆம், நான் மாணவர்களுக்கு சரியாக கற்றுக்கொடுக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது..
ரோபோவை தயாரித்த ஆதித்யா குமார் இதுகுறித்து பேசிய போது “இந்த ரோபோவை உருவாக்க LLM சிப்செட்டை பயன்படுத்தியுள்ளேன். ரோபோ தயாரிக்கும் பெரிய நிறுவனங்களும் இதே சிப்செட்டையே பயன்படுத்துகின்றன. இது மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க முடியும்… இப்போது இது பேச மட்டுமே முடியும். ஆனால் விரைவில் எழுதவும் செய்ய முடியும் வகையில் நாங்கள் வடிவமைத்து வருகிறோம்.
எனக்கு கிடைத்த மாதிரி, ஒவ்வொரு மாவட்டத்திலும் சரியான ரிசர்ச் லேப் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், மாணவர்கள் வந்து ஆராய்ச்சி செய்ய முடியும்.” என்று தெரிவித்தார்..
ஆதித்யா, சோபி எப்படி வேலை செய்கிறது என்பதை காட்டுவதற்காக அதிடம் பல கேள்விகளைக் கேட்டார். உலகின் உயரமான கட்டிடம் எது, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார், முதல் பிரதமர் யார் போன்ற கேள்விகளுக்கும் அது பதிலளித்தது.
மேலும், “மின்சாரம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கும், “100 + 92” என்ற கணக்கும் சரியாக கூறியது.
ஒருகட்டத்தில் , ரோபோ மாணவர்களுக்கு சரியாக கற்பிக்க முடியுமா என்று ஆதித்யா கேட்டார். அதற்கு சோபி, மாணவர்களைச் சரியாக கற்பிக்க முடியும் என்று தெளிவாக பதிலளித்தது. தற்போது சோபி ஹிந்தி மொழியில் மட்டுமே பேச முடிகிறது.
ஆதித்யா குமார் தற்போது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர். ஒரு வகுப்பில் ஆசிரியர் வராத சூழலில், சோபி ஒரு மாற்று ஆசிரியராக செயல்பட முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
Read More : உத்தரகாண்டின் 3 பகுதிகளை 100 ரூபாய் நோட்டில் அச்சிட்ட நேபாளம்; இது குறித்து இந்தியா எங்கே புகார் அளிக்கலாம்?



