உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், காவல்துறையின் வாகனத்தை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் ரீல் (Instagram reel) எடுத்துள்ளார். காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்த நேரத்தை பயன்படுத்தி, அவர் அந்த ரீலை எடுத்தது தெரிய வந்தது. அந்த ரீல் வைரலான நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் உள்ள காஜியாபாத்தில், மொயின் கான் என்ற இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் எடுப்பதற்காக காவல்துறையின் […]
viral video
‘cummentwala_69’ என்ற இன்ஸ்டாகிராம் பயனாளர் சமீபத்தில் பதிவேற்றிய வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. கையில் சோகோஸை வைத்திருக்கும் நபர் ” நீங்கள் எங்களுக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவை வழங்க நினைக்கிறீர்களா.? என கெல்லாக்ஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்புகிறார். அதன் பிறகு அவர் கையில் வைத்திருக்கும் சோகோஸை காட்டும்போது அதில் ஒரு வெள்ளை நிற பொருள் ஊறுவது போன்று தெரிகிறது. ஆம் அவரது சோகோஸ் முழுவதும் புழுக்கள் […]
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் பாஜக மட்டும் 370 தொகுதிகளை கைப்பற்றும் என அடித்து கூறினார் . காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் தங்களது இருக்கையிலேயே அமர விரும்புகின்றன. அவர்களுக்கு […]
தலைநகர் டெல்லியின் அருகே உள்ள கிராமத்தின் சலூன் கடையில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டெல்லியின் அருகே உள்ள கிராமமான நஜாப்கர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள சலூன் கடைக்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ […]
ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் அமெரிக்காவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரை காப்பாற்ற வேண்டி, அந்த மாணவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது . தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் இந்தியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இவரை […]
கேரளாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வெளி விவகாரம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி, கூடியிருந்த மாணவர்களிடம் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் வலதுசாரி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையின் முடிவில் வட மாநிலங்களைப் போல ‘பாரத் மாதா […]
அமெரிக்காவில் 25 வயது விவேக் சைனி என்கிற இந்திய மாணவர், வீடற்ற ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்கடிக்கிறது. அமெரிக்காவின், ஜார்ஜியாவில் உள்ள லித்தோனியாவுக்கு, இந்தியாவின் ஹரியானாவை சேர்ந்த, 25 வயது மாணவர் விவேக் சைனி, முதுகலை பட்டப் படிப்பிற்காக சென்றார். எம்பிஏ மாணவரான இவர், அங்கு உள்ள ஒரு கடையில் பகுதி நேர எழுத்தராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த […]
பாகிஸ்தானின் பிரபல பின்னணி பாடகர், ரஹத் ஃபதே அலி கான் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். இந்தி படங்கள் மற்றும் பாகிஸ்தானி படங்களில் அதிக பாடல்களைப் பாடியுள்ளார். இவர் அதிக சம்பளம் வாங்கும் பின்னணிப் பாடகர் ஆவார். தற்போது தனது பணியாளை செருப்பைக் கொண்டு அவர் அடிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பாட்டிலை கேட்டு தனது வீட்டின் பணியாளரை மூர்க்கமாக தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. […]
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் வைத்து நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 2019 ஆம் வருடம் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் […]
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.இந்த தினத்தில் மக்கள் அனைவரும் குடும்பத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வளமையாகக் கொண்டுள்ளனர் . மேலும் காணும் பொங்கல் தினத்தன்று பல்வேறு ஊர்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது . இந்நிலையில் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமத்தில் […]