சென்யார் மற்றும் டிட்வா என்ற 2 சக்திவாய்ந்த புயல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.. இந்த புயல்களால் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.. இது இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையை அதிகம் தாக்கியது.. இந்தியாவின் தெற்கு கடற்கரையிலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.
மலாக்கா ஜலசந்தியில் முதலில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் சென்யார் புயலாக மாறியது, இப்போது தென் சீனக் கடலில் கரையை கடந்ததாக ஹாங்காங் ஆய்வகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்யார் பலவீனமடைந்த உடனேயே, மற்றொரு புயலான டிட்வா தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி, இலங்கை மற்றும் இந்தியாவை நோக்கி நகர்ந்தது.
வடகிழக்கு இந்தியப் பெருங்கடலின் அந்தமான் கடலையும் மேற்கு பசிபிக் பெருங்கடலின் தென் சீனக் கடலையும் இணைக்கும் மலாக்கா ஜலசந்தியின் மீது உருவான சென்யார் சூறாவளி இந்தியாவிற்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.. இது மேலும் இந்திய கடற்கரையிலிருந்து விலகி இந்தோனேசியா மற்றும் மலேசியாவை நோக்கி நகர்ந்தது.
நவம்பர் 27 ஆம் தேதி உருவான டிட்வா புயல், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்திய கடற்கரைகளைத் தாக்காமல் நின்றுவிட்டது, இருப்பினும், சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
‘அரிதான’ புயல் சென்யார் என்ன செய்தது?
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ஒரு வாரமாக பெய்த மழை, “அரிதான” புயல் சென்யார் மூலம் மேலும் தீவிரமடைந்தது.. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது, 508 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தேசிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது..
கனமழையால் இந்தோனேசியாவின் பெரும்பாலான சாலைகள், தகவல்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.. எனினும் அங்கு மீட்புப் பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..
இந்தோனேசியாவில் உள்கட்டமைப்பு சேதத்திற்கு புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.. தங்கள் வாழ்நாளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு என்று மக்கள் தெரிவித்தனர்.. 2001 ஆம் ஆண்டில் அழிவுகரமான டைபூன் வாமேய் மலாக்கா ஜலசந்தியை கடந்து சென்றதிலிருந்து உருவான முதல் வெப்பமண்டல புயல் சென்யார் என்று தெரிவித்தனர்..
வெப்பமண்டல புயல்கள் பூமத்திய ரேகைக்கு அருகில் அரிதாகவே உருவாகின்றன, கோரியோலிஸ் விளைவு எனப்படும் பலவீனமான சுழற்சி சக்தி காரணமாக ஏற்படலாம்.. மலாக்கா ஜலசந்தியில் வெதுவெதுப்பான நீர் வெப்பநிலை உள்ளிட்ட பல காரணிகளின் கலவையால் சென்யார் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
மற்ற இடங்களில், சென்யார் புயலால் ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து, பெட்ரான் மலேசியா சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பெர்ஹாட் ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
சென்யார் சூறாவளி தாய்லாந்திலும் பேரழிவை ஏற்படுத்தியது.. நாட்டின் தெற்குப் பகுதியில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 176 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
மொத்த இழப்புகள் 23.6 பில்லியன் பாட் ($734 மில்லியன் அல்லது தோராயமாக ₹6,560 கோடி) என்று கூறப்படுகிறது, இதில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாது.. ரப்பர் மற்றும் பாமாயில் உற்பத்தியும் சேதமடைந்துள்ளது.
டிட்வா புயல்
இலங்கையில், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் இதுவரை 334 பேர் உயிரிழந்தனர். சுமார் 370 பேர் காணாமல் போயினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவு நாட்டில் கரையை கடக்கத் தொடங்கிய டிட்வா சூறாவளியால், வார இறுதியில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு ரெட் அலர்ட் விடுத்தது. டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்..
புயல் கடந்து வந்ததால் இலங்கை “மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவை” எதிர்கொண்டுள்ளது என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கோட்டோ புயல்
3-வது புயல் – கோட்டோ புயல் – வியட்நாமின் கிழக்கே கரையோரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வரும் நாட்களில் மெதுவாக வலிமையை இழக்கிறது. இருப்பினும், நாட்டின் மத்திய மற்றும் வட-மத்திய பகுதிகளுக்கு இது இன்னும் கூடுதல் மழைப்பொழிவை ஏற்படுத்தும், ஏனெனில் அவை ஏற்கனவே கடுமையான புயல்கள் மற்றும் வரலாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன..
இதனால் சமீபத்திய வாரங்களில் குறைந்தது 3 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது. பெரும்பாலான பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைப்பொழிவு வாரத்தின் நடுப்பகுதியில் வழக்கமான பருவகால நிலைக்குத் திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. சமீபத்திய முன்னறிவிப்பின்படி, தீபகற்ப மலேசியா மற்றும் சுமத்ராவில் டிசம்பர் நடுப்பகுதியில் வறண்ட வானிலை நிலவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : இனி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் Whatsapp Web லாக் அவுட்ஆகிவிடும்.. மத்திய அரசின் புதிய விதி..!



