65 கிமீ வேகத்தில் பயங்கர காற்று… மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

cyclone rain

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை முதல் 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

செக்..! எத்தனை மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது...? விவரத்தை சமர்ப்பிக்க உத்தரவு...!

Thu Dec 18 , 2025
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய விவரத்தை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொருளாதார தடை இன்றி மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு மாதந்தோறும் உதவி தொகைகளையும் தமிழரசு வழங்கி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதந்தோறும் தகுதி உள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பொருளாதார தடை இன்றி கல்வியை தொடர் முடிகிறது.‌ அந்த நிலையில் மற்றொரு திட்டத்தை […]
Laptop 2025

You May Like