fbpx

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் கல்வியாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 முதல் 24ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1, 4, 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளன. குறிப்பாக தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெண்களே உஷார்.! டெலிகிராம் மூலம் நூதன விபச்சாரம்.! துருக்கி பெண் உட்பட 8 பேர் கைது.! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

Fri Jan 12 , 2024
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பலை காவல்துறை கைது செய்து இருக்கிறது. துருக்கி நாட்டைச் சேர்ந்த இந்த கும்பலின் தலைவி உட்பட 8 பேரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. பெங்களூர் நகரில் ஹைடெக் விபச்சாரம் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தியது பெங்களூர் காவல்துறை. இந்நிலையில் […]

You May Like