சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையம் அருகே உள்ள பணிமனடையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயணிகள் விரைவு ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை. பெட்டிகளை இணைப்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் அந்த வழித்தடத்தில் வேறு எந்த ரயில்களும் வராது என்பதால் போக்குவரத்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை.. பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது..
எனினும் பணிமனையில் இருந்து புறப்படும் தண்டவாளத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? அல்லது ரயில் பெட்டிகள் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : Breaking : கிராமம் முழுவதும் எரிவாயு கசிவு.. பற்றி எரியும் மரங்கள்.. ஆந்திராவில் பெரும் பரபரப்பு..!



