Flash : ரூ.3,000 பணம் + பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

cm stalin 3

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.. ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.


இந்த நிலையில் பொங்கல் பரிசு விநியோகத்தை சென்னை ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில்  முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்..

இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்ஆன டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.. டோக்க இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பொங்கல் பரிசு தொகுப்புகளை அவர்கள் குறிப்பிடும் நாட்களில் வந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் எப்போது..? மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது..?

RUPA

Next Post

அமித்ஷாவுடன் பேசியது என்ன? ஓபிஎஸ், சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார்களா? இபிஎஸ் பரபரப்பு விளக்கம்..!

Thu Jan 8 , 2026
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]
eps ops sasikala ttv

You May Like