குறைந்த வட்டியில் ரூ.30,00,000 வரை கடன்..!! தமிழ்நாடு அரசின் அட்டகாசமான திட்டம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

money 1 e1765948687998

தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. சுயவேலைவாய்ப்பு, கைவினைத் தொழில் மற்றும் உயர்கல்வி எனப் பல பிரிவுகளின் கீழ் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.


இத்திட்டங்கள் வருமான வரம்பின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுத்தப்படுகின்றன. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதில் தனிநபர் கடனாக 20 லட்சம் ரூபாய் வரை 6% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ், 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்; இதற்கு ஆண்களுக்கு 8% மற்றும் பெண்களுக்கு 6% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சுய உதவிக்குழுக்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் வரையிலும், கைவினை கலைஞர்களுக்கான ‘விராசாத்’ திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரையிலும் மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது.

மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயில்வோருக்கு 20 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு வெறும் 3% முதல் 8% வரையிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். விண்ணப்பத்துடன் மதச் சான்றிதழ், வருமானச் சான்று, ஆதார், குடும்ப அட்டை மற்றும் கல்விக் கடனாக இருந்தால் கல்வி நிலையத்தின் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) ஆகியவற்றை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : FLASH | அதிரும் அரசியல் களம்..!! இன்று அதிமுகவில் இணைகிறார் காளியம்மாள்..!! குஷியில் எடப்பாடி..!! அதிர்ச்சியில் சீமான்..!!

CHELLA

Next Post

FLASH | நள்ளிரவில் பயங்கரம்..!! ஸ்கூட்டர் மீது அதிவேகமாக மோதிய பேருந்து..!! தந்தை, தாய், பச்சிளம் குழந்தை பரிதாப பலி..!!

Wed Jan 21 , 2026
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில், தம்பதியினருடன் சேர்த்து அவர்களது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது கைக்குழந்தையுடன் ஸ்கூட்டரில் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர். லாலாபேட்டை மேம்பாலத்தை கடக்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் […]
Accident 2026 1

You May Like