“என் பொண்டாட்டி போனதுக்கு நீதாண்டா காரணம்”..!! கள்ளக்காதலன், மனைவியை குத்திக்கொன்ற கணவன்..!! செங்கல்பட்டில் பயங்கரம்..!!

Crime 2026 15

செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் அடுத்த ரெட்டி குப்பம் பகுதியில், அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பார்த்திபன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.


காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவலின்படி, பார்த்திபனின் மனைவி ஜமுனாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த சுசில் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜமுனா தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது குடும்பம் சிதைந்து போனதற்கு சுசில் தான் முக்கியக் காரணம் என்ற வஞ்சத்தை மனதிற்குள் வளர்த்து வந்த பார்த்திபன், தக்க சமயம் பார்த்துத் தேடி வந்துள்ளார்.

நேற்று மாலை மதுபோதையில் சுசிலின் வீட்டிற்குச் சென்ற பார்த்திபன், தனது வாகனத்தை அங்கு நிறுத்தியது தொடர்பாக சுசிலின் மனைவி கிரிஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வேலை முடிந்து திரும்பிய சுசிலும் இதில் தலையிட, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பார்த்திபன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசிலின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். கணவரை காக்க ஓடி வந்த கிரிஜாவையும் பார்த்திபன் இரக்கமின்றி குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த தம்பதியினரை மீட்ட மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கானத்தூர் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீசார், உடல்களை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தலைமறைவாக இருந்த பார்த்திபனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

Read More : ஓபிஎஸ் அணியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்..!! தனிக் கட்சி தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்..!! தவெகவுடன் கூட்டணி..!!

CHELLA

Next Post

"விளம்பரத்தை பார்த்து ஏமாறாதீங்க"..!! ஸ்மார்ட்போன் வாங்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..!!

Wed Feb 18 , 2026
இன்றைய நவீன உலகில், மனிதர்களின் ஆறாவது விரலாகவே ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் தவழும் இந்த மின்னணு சாதனம், ஒரு அத்தியாவசியத் தேவையாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஒரு புதிய போனை வாங்கும் விஷயத்தில் நம்மில் பலரும் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், சந்தையில் எது பிரபலமாக இருக்கிறதோ அல்லது எது புதிதாக அறிமுகமாகிறதோ அதை உடனே வாங்கிவிடுவதுதான். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பிப் பணத்தை விரயம் […]
Smartphone 2026

You May Like