கூச்சமே இல்லையா ஓபிஎஸ்..? ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? அதிமுக காட்டமான கேள்வி..!

ops dmk admk

அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை..


திமுகவில் இணைந்த பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலினுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் அரசியல் பண்பாட்டு உடன் கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகிறார்..

அரசியலில் இன்று சர்வாதிகாரியாக ஆணவப் போக்குடன் நடந்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி எந்த காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத என்ற சூழ்நிலையை அதிமுகவுக்கு உருவாக்கி இருக்கிறார்.. அம்மா மறைவுக்கு பின்னர் லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று மு.க ஸ்டாலினின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்துள்ளனர்..

இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அதிமுக ஐடி விங்கில் கடுமையாக சாடி உள்ளது.. அதில் “ கூச்சமே இல்லையா ஓபிஎஸ்..? ரோஸி டீக்கடை” நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.

அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும்
பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்!

உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின்
வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்! பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக,
இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர்
இரத்தத்தின் இரத்தமான அதிமுக தொண்டர்கள்! பசுத்தோல் போர்த்திக் கொண்டு
நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப் பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும்,
ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு
அம்மா எல்லாம் சும்மா தானே?! “உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க” என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!

இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற… உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும். (பி.கு. : தயவு செய்து “அம்மா” புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!)” என்று தெரிவித்துள்ளது..

RUPA

Next Post

"உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்.." தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் பேட்டி..

Fri Feb 27 , 2026
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
tamilnadu election date eci

You May Like