தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை உள்ளிட்டோர் இறுதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்..
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளன.. கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியில் இருந்த தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. அதே போல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஏற்கனவே திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. எஸ்டிபிஐ கட்சியுடன் இன்று திமுக தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.. அதே போல் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. இந்த கட்சியுடனும் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது..
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியர்சு ஆதரவு தெரிவித்துள்ளார்.. அதே போல் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் களம் காண்கிறது.. எனவே இந்த முறை கூடுதலாக புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் இருக்கிறது..
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் பழைய கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது..
கூட்டணி கட்சிகள் அனைத்தையும் அரவணைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் திமுக உள்ளது.. அதன் அடிப்படையிலேயே நட்பு ரீதியாக பழைய கட்சிகளிடம் தொகுதிகளின் இடங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் என்று திமுக தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.. இந்த கட்சிகளும் திமுகவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



