ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.. மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை புதுதில்லியில் உள்ள ஈரானிய தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இந்திய அரசு சார்பில் மிஸ்ரி தனது கையெழுத்தை பதிவு செய்தார்.
காமெனி மரணம் – போர் தொடக்கம்
அயத்துல்லா அலி கமேனி கடந்த 28-ம் தேதி அன்று United States மற்றும் Israel இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மேற்கு ஆசியப் பகுதியில் பெரிய அளவிலான போருக்கு வழிவகுத்துள்ளது.
மற்ற நாடுகளிலும் போரின் தாக்கம்
இந்த போரின் தாக்கம் மத்திய கிழக்கு மட்டுமின்றி, இலங்கை கடற்கரை பகுதிகளையும் சென்றடைந்துள்ளது. இலங்கை கடல் பகுதியில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் (submarine) ஈரான் போர்க்கப்பலை டார்பிடோ மூலம் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் அஜர்பைஜான் நாட்டிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கு ஒரு ட்ரோன் தாக்குதலில் விமான நிலையம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டதால், அந்நாடு பதிலடி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசர்பைஜான் அரசு, “இந்த தாக்குதலுக்கு பதில் அளிக்காமல் விடமாட்டோம். தேவையான பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. இதனால் மேலும் ஒரு நாடு இந்த போரில் சேரும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
போர் தொடங்கியதிலிருந்து 1,045 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஈரானிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.. ஆனால் இந்த எண்ணிக்கையை தனித்தனியாக சரிபார்க்க முடியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
டெஹ்ரானில் பல கட்டிடங்கள் சேதம்
ஈரான் தலைநகர் டெஹ்ரான் நகரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் விளையாட்டு வளாகம், கால்பந்து மைதானம், நகராட்சி கட்டிடம் மற்றும் பல கடைகள் சேதமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



