விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. மேலும் தனது மனுவில் “ விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்.. அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்..
அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. எனது கணவரின் மூலம் நெருக்கடி வந்தால் அந்த நடிகையின் பெயரையும் சொல்வேன்.. அவரை 2-வது எதிர் மனு தாரராக சேர்ப்பேன்..” என்று குறிப்பிட்டிருந்தார்..
விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.. இந்த சூழலில் சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது..
இந்த பரபரப்பு அடங்குவதற்குள். விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.. மேடைக்கு ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒன்றாகவே புறப்பட்டனர்.. இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறி உள்ளது.
விஜய் என்ன செய்தாலும், அவருக்கு சப்போர்ட் செய்து வந்த விஜய்யின் ரசிகர்கள் இந்த விஷயத்தில் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.. விஜய்யின் கட்சி தொண்டர்களோ, கட்சியை விட்டு விலகுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் விஜய் மனைவி சங்கீதா பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது விவாகரத்து கேட்டு மனு கேட்டதால், ஆத்திரமடைந்த விஜய். சங்கீதாவை வசை பாடியும் அடித்து துன்புறுத்தியும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் நீலாங்கரை வீட்டில் விஜய்யும் – சங்கீதாவும் தனித்தனியாக பிரிந்து வாழும் சூழலில் சங்கீதாவை அடித்து துன்புறுத்திய விஜய் அவரை வீட்டு சிறையில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. த்ரிஷா கூறி தான் விஜய் இவ்வாறு செய்ததாகவும், சங்கீதாவை யாரேனும் விஜய்யிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. எனினும் இதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை..
Read More : ஹுருன் பணக்காரர்கள் லிஸ்ட் 2026 : இந்தியாவில் 57 புதிய கோடீஸ்வரர்கள்..! முதலிடத்தில் யார்..?



