சென்னையில் இருந்து சென்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை அதிகாலை நெல்லூர் அருகே உள்ள காவலி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாரி ஓட்டுநர் மற்றொரு லாரி மீது மோதாமல் இருப்பதற்காக விலகிச் செல்ல முயன்றபோது எதிரே வந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.