ஈரான் – இஸ்ரேல் போர் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் பதட்டமான சூழ்நிலையால் இந்தியாவுக்கான எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டில் மக்கள் எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். வணிக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஹோட்டல்கள், உணவு கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதுவரை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மூன்று கப்பல்கள் வந்துள்ளன, மேலும் எரிவாயு இருப்பு கொண்ட கப்பல்களும் வளைகுடா நாடுகளிலிருந்து வருகின்றன. இருப்பினும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகலாம். விரைவில் வணிக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் தொடங்குவதாக மையம் அறிவித்துள்ளது. எரிவாயுவை முன்பதிவு செய்த பிறகும் உள்நாட்டு எரிவாயு பயனர்கள் தங்கள் விநியோகங்களில் தாமதத்தை எதிர்கொள்கின்றனர்.
இருப்பினும் கூட கேஸ் தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நகர்புற பகுதிகளில் எல்பிஜி முன்பதிவு இடைவெளியை 21ல் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் PIB (Press Information Bureau) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவி வரும் புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக எல்பிஜி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் முன்பதிவு: எல்பிஜி முன்பதிவுக்கு டிஜிட்டல் முறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அவசர தேவைகளைத் தவிர விநியோகஸ்தர்களை நேரில் அணுக வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மாற்று எரிபொருட்களாக பிஎன்ஜி, இன்டக்ஷன், மின்சார அடுப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
5 கிலோ LPG சிலிண்டர் விநியோகம் அதிகரிப்பு: உள்ளூர் தேவைகளை கருத்தில் கொண்டு 5 கிலோ எடையுள்ள FTL LPG சிலிண்டர்களின் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முகவரி சான்று தேவையில்லை. செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் வாங்கலாம். மார்ச் 23 முதல் சுமார் 5.7 லட்சம் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கள்ளச் சந்தைக்கு கடும் நடவடிக்கை: எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலை கட்டுப்படுத்த:
- நாடு முழுவதும் திடீர் சோதனைகள் தீவிரம்
- நேற்று மட்டும் 3700-க்கும் மேற்பட்ட சோதனைகள்
- 27 விநியோகஸ்தர்களின் உரிமம் ரத்து
- 1000-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன
Read more: Walking: தினமும் 30 நிமிடம் 8 வடிவ நடைப்பயிற்சி செய்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!



