தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது..
இந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.. காலை முதலே விஜய்யின் தவெக முன்னிலை வகித்து வருகிறது.. அதன்படி காலை 10 மணி நிலவரப்பட்டி தவெக 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. அதிமுக 75 இடங்களிலும் திமுக 56 இடங்களிலும் முன்னிலை வகித்தது..
பிற்பகல் 12 மணி நிலவரப்படி தவெக 99 இடங்களிலும், அதிமுக 74 இடங்களிலும், திமுக 61 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தொங்கு சட்டசபை அமைய வேண்டும்….
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.. 5-வது சுற்றில் திடீரென விவிபேட் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தபப்ட்டுள்ளது.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..



