விஜய்க்கு வழங்கப்பட்ட உயர்மட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது ஏன்..? தவெக நிர்மல்குமார் விளக்கம்..!

vijay nirmal kumar

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சித் தலைவர் மற்றும் முக்கிய அரசியல் தலைவராக விஜய்க்கு அரசு சார்பில் நான்கு கான்வாய்  வாகனங்கள் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதோடு நீலாங்கரை வீட்டின் முன் உயர்மட்ட பாதுகாப்புக்காக 2 மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், இன்று காலை அவருக்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. மேலும், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பேரிகார்டுகளும் அகற்றப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர்களையும் அங்கிருந்து அகற்றிய போலீசார் வாகனத்தில் கொண்டு சென்றனர். இதனால் அங்கு இருந்த தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏன் திடீரென வாபஸ் பெறப்பட்டது என்பது குறித்து காவல்துறை அல்லது அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒருபுறம் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு புறம் பாதுகாப்பு விலக்கப்பட்ட விவகாரமும் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தெரிவித்ததன் பேரிலேயே உயரடுக்கு பாதுகாப்புகள் அகற்றப்பட்டதாக சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” விஜய் செல்லும் போது பொதுமக்கள் ஆங்காங்கே நிறுத்தபப்டுவதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க பாதுகாப்பு வேண்டாம் என விஜய் கூறினார்.. எனவே விஜய் தெரிவித்ததன் பேரிலேயே உயரடுக்கு பாதுகாப்பு அகற்றப்பட்டது.. பதவியேற்பு விழா முடிந்த பின்னர் அல்லது பாதுகாப்பு தேவைப்படும் போது அழைப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்..

Read More : “ஸ்டாலின் எவ்வளவு பெரிய தலைவர்.. அவர் தோற்கலாமா..? ” தேர்தல் முடிவுகள்.. வருத்தம் தெரிவித்த இபிஎஸ்..!

RUPA

Next Post

விஜய் முதலமைச்சராக பதவியேற்பது தான் சரி.. ஆளுநர் இதை செய்ய வேண்டும்..! திருமா சொன்னத கவனிச்சீங்களா..

Thu May 7 , 2026
Vijay should become the Chief Minister.. but there is confusion in taking office due to BJP's interference..! - Thiruma
vijay thiruma 1

You May Like