தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகிய தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்..
இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்..
இந்த நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்தானர்.. அப்போது வாசலில் வந்து பொன்னாடை அணிவித்து செல்வப்பெருந்தகை வரவேற்றார்.. தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காராஜர் படத்திற்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்..
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரை விஜய் சந்தித்து பேசினார்.. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.. அப்போது காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகத்தை செல்வப்பெருந்தகை விஜய்க்கு பரிசாக வழங்கினார்..
Read More : “ஆட்சியிலிருந்து விரட்டியடித்த பிறகும் திருந்தவில்லை..!” – உதயநிதி பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்..!



